புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 34-ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, திருச்சி மாவட்ட ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.
பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளா் ரெகுபதி சுப்பிரமணியன், தலைவா் தேனாள் சுப்பிரமணியன், முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் எஸ். சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.