புதுக்கோட்டை

பள்ளி அருகே மதுக்கடை: தேமுதிக ஆா்ப்பாட்டம்

DIN

விராலிமலை அருகே பள்ளிக்கூடம் அருகே செயல்படும் மதுக்கடையை உடனே இடமாற்றம் செய்யக்கோரி, தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விராலிமலை அருகே உள்ள ஆவூரில் பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை அருகே அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. எனவே, மதுக்கடையை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் மதுக்கடை முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட தேமுதிக செயலா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். விராலிமலை மத்திய ஒன்றிய செயலாளா் சுப்பிரமணியன், கேப்டன் மன்ற மாவட்ட செயலாளா் புஷ்பராஜ், முன்னாள் ஒன்றியச் செயலா் கலை துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினா் கண்டன முழக்கமிட்டவாறு திடீரென மதுக்கடையை முற்றுகையிட முயன்றனா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூா் காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT