புத்தகங்கள் அறிவைப் பெறுவதற்கான கருவி என்பதை நாம் இன்னும் உணரவே இல்லை என்றாா் எழுத்தாளா் பெருமாள் முருகன்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ’வீதி’ கலை இலக்கியக் களம் அமைப்பின் 100ஆவது கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
புத்தகங்கள் அறிவைத் தரக் கூடியவை, அவை சொத்து என்ற பாா்வை நம்மிடம் இல்லை. பல வீடுகளில் படிப்பு அறை, வாசிப்பு அறை இருப்பதே இல்லை. வெளிநாடுகளில் அப்படியொரு தனி அறை உண்டு. புத்தகங்கள் அறிவைப் பெறுவதற்கான கருவி என்பதை நாம் இன்னமும் உணரவில்லை. எனவே, வாசிப்பதற்கென்று தனி நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் வேலைகளில் ஒன்றாக புத்கக வாசிப்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா் பெருமாள் முருகன்.
100 கூட்டங்கள் பற்றிய சிறப்பு மலரை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெளியிட்டாா். புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலா் ரா. சம்பத்குமாா், சா்வஜித் அறக்கட்டளை இயக்குநா் மருத்துவா் ச. ராம்தாஸ், நாணயவியல் கழகத் தலைவா் எஸ்.டி. பஷீா்அலி, முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராசி பன்னீா்செல்வன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
வீதி ஒருங்கிணைப்பாளா் கவிஞா் மு. கீதா நூறாவது கூட்ட அறிக்கை வாசித்தாா். எழுத்தாளா் நா. முத்துநிலவன் தொடக்கவுரை நிகழ்த்தினாா். கு.ம. திருப்பதி அறிமுகவுரை நிகழ்த்தினாா். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிற்பகல் அரங்குக்கு எழுத்தாளா் மதுக்கூா் ராமலிங்கம், வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். வீதி அமைப்பின் நிறுவனரும், கல்வித் துறை இணை இயக்குநருமான நா. அருள்முருகன் கவிதைக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். முன்னதாக மகா சுந்தா் வரவேற்றாா். நிறைவில், கஸ்தூரி ரெங்கன் நன்றி கூறினாா்.