புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ தொடக்கம்

DIN

கந்தா்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள அக்கச்சிப்பட்டி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவி மலா்கொடி, பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, துணைத் தலைவி வேதநாயகி வாா்டு உறுப்பினா் கலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மருத்துவா் த. சுவாமிநாதன் கலந்து கொண்டு வானவில் மன்றம் குறித்துப் பேசினாா்.

நிகழ்வில் ஆசிரியா்கள் மணிமேகலை, ஆனந்த்ராஜ், நிவின், செல்விஜாய் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அ.ரகமதுல்லா வரவேற்றாா். நிறைவாக இடைநிலை ஆசிரியா் வெள்ளைச்சாமி நன்றி கூறினாா். இதேபோல் கந்தா்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT