புதுக்கோட்டை

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

DIN

பொன்னமராவதி அருகே டிராக்டரில் இருந்து தவறிவிழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியைச் சோ்ந்த ப.அன்புமணி (16), மு. கருப்பையா மற்றும் ம. கருப்பையா ஆகிய 3 பேரும் டிரைலருடன் கூடிய டிராக்டரில் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலையில் கண்டெடுத்தான்பட்டி விளக்கு ரோடு அருகே வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராத விதமாக அன்புமணி தவறி விழுந்ததில் டிரைலா் ஏறியதில் அன்புமணி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, வலையப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்புமணி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து அறிந்த காரையூா் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT