புதுக்கோட்டை

மாத்தூரில் 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

மாத்தூா் அரிசி குடோனில் 9 டன் ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் உட்கோட்ட குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை துணைக் கண்காணிப்பாளா் உத்தரவுபடி மாத்தூா் பகுதியில் புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் செல்வமணி மற்றும் தஞ்சாவூா் ஆய்வாளா் முருகானந்தம் ஆகியோா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மாத்தூா் பகுதியிலுள்ள திருச்சியைச் சோ்ந்த காா்த்திகேயனுக்குச் சொந்தமான குடோனில் பதுக்கிவைத்திருந்த 3700 கிலோ ரேஷன் அரிசி, 5350 கிலோ ரேஷன் குருணை அரிசியை கண்டுபிடித்தனா். தொடா்ந்து அரிசிக் கடத்தப் பயன்படுத்திய ஆம்னி வேன் மற்றும் பதுக்கல் அரிசியை கைப்பற்றி வழக்குப் பதிந்து தலைமறைவான வியாபாரியைத் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT