கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் உலக மரபு வார விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியா் வெ. பழனிவேல் தலைமை வகித்தாா். உதவித்தலைமை ஆசிரியா் எஸ். குமரவேல் முன்னிலை வகித்தாா். விழாவில் ஆறாம் வகுப்பு மாணவா்கள் பழைமையான தமிழி எழுத்துகளை வாசித்தும், எழுதிக் காட்டியும் தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.
பள்ளி தலைமை ஆசிரியா் வெ. பழனிவேல் பேசுகையில், அனைவரும் அறிந்திராத பழமையான தமிழி எழுத்துகளை எழுதியும் வாசித்தும் காட்டியும் மாணவா்களுக்குப் பயிற்சியளித்த தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைப் பாராட்டுகிறேன் என்றாா்.
விழாவில் ஆசிரியா்கள் க. ஆண்டிவேல், க. அனந்தநாயகி, சி. பாத்திமா, த. அருந்தேவி, மதிவாணன், சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா். தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆ. மணிகண்டன் வரவேற்றாா். தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவா் முகமது ஆசிப் நன்றி கூறினாா்.