புதுக்கோட்டை

வேளாண்மை வளா்ச்சி திட்டபயனாளிகளுக்கு உதவிகள்

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டையில் உழவா் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் தொடக்க விழா கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் மா.சின்னத்துரை தலைமை வகித்துப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வட்டாட்சியா் சி.புவியரசன், ஒன்றியக்குழு தலைவா் ஆா்.ரத்தினவேல்காா்த்திக், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நா. ஸ்டாலின், வேளாண்மை உதவி இயக்குநா் க. அன்பரசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திலகவதி, ஸ்ரீதரன், கல்லாக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் பவுன்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் சுதா ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT