பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு கல்லூரியின் முதல்வா் ம. செல்வராசு தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பொன்.கதிரேசன் வரவேற்றாா். யோகா துறை பேராசிரியா் ராஜேஸ்வரி யோகாவின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணா்வு உரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தாா். பேராசிரியா்கள் வே.அ. பழனியப்பன், ச.விண்மதி, பாண்டித்துரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திட்ட அலுவலா் அ.ராமு நன்றி கூறினாா்.