விராலிமலை அருகே பிடிபட்ட 3 மலைப்பாம்புகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் கிராமத்தில் உள்ள புது குளக்கரையில் திங்கள்கிழமை மூன்று மலைப்பாம்புகள் பின்னிக்கொண்டு கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் மலைப் பாம்புகளை லாவகமாகப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.