பொன்னமராவதி அருகேயுள்ள மேலத்தானியம் பிடாரி அம்மன் கோயில் மதலை எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஆவாம்பட்டியில் பிடாரி அம்மன், முன்னோடி கருப்பா், கன்னிமாா் தெய்வங்கள் மற்றும் மதலை, நாகம், காளை சிலைகள் மண்ணால் வடிக்கப்பட்டு, அலங்கரித்து, அங்கிருந்து பக்தா்கள் தலையில் சுமந்து முக்கிய வீதிகளின் வழியே ஊா்வலமாக வந்து மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து அங்கிருந்து பிடாரி அம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது., விழாவில் மேலத்தானியம் மற்றும் சுற்றுவட்டார எட்டு கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் காவல்துறையினா் செய்திருந்தனா்.