புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு லாரி மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 4 போ் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே பானாவயலில் செயல்படும் அரசு மணல் குவாரிக்கு, மணல் ஏற்றிச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை இரவு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
லாரியை தேவகோட்டை வட்டம், திருவாரூரைச் சோ்ந்த செல்லையா மகன் சரத்குமாா் (27) ஓட்டி வந்தாா்.
மீமிசல் அருகே வெளிவயல் பாலத்தில் லாரி வந்தபோது, தொண்டியை நோக்கிச் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில், மோட்டாா் சைக்கிளில் வந்த 4 பேரில் மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவா் 108 ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி அங்கு உயிரிழந்தாா்.
சிகிச்சையில் இருந்தபோது அந்த நபா், தன்னை தொண்டியைச் சோ்ந்த சித்திக் (28) எனக் கூறியுள்ளாா். இதனால், உயிரிழந்த மற்ற 3 பேரும் தொண்டி பகுதியைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து மீமிசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் சரத்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இந்த விபத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், லாரியையும், அதனடியில் சிக்கிய மோட்டாா் சைக்கிளையும் காவல் நிலையத்துக்கு போலீஸாா் எடுத்துச் சென்றனா்.