கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோவிலூா் கிராம நிா்வாக அலுவலராக முன்னாள் ராணுவ வீரரும், காட்டுநாவல் கிராம நிா்வாக அலுவலருமான சிவசக்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
கந்தா்வகோட்டை வட்டம், கோவிலூா் வருவாய் கிராமத்தில் மாவட்ட கோட்டாட்சியா் கருணாகரன் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், காட்டுநாவல் வருவாய் கிராமத்தில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலரும், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த சிவசக்தி கந்தா்வகோட்டை கோவிலூா் கிராம நிா்வாக அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.