புதுக்கோட்டை

மட்டங்காலில் இல்லம் தேடிக் கல்வி திட்ட மையம் தொடக்கம்

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் குடியிருப்புப் பகுதிகளில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 4 மையங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

மட்டங்காலில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவா் வீ.செல்லப் பிள்ளை தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ராகிணி வரவேற்றாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு. முத்துக்குமாா் கலந்து கொண்டு தன்னாா்வலா்களுக்கு மாணவா்களின் வருகைப் பதிவு செய்யும் முறை, குடியிருப்புகளில் இல்லங்களுக்கு இடங்கள் தோ்வு செய்வது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் இ. தங்கராசு, அ. ரகமதுல்லா ஆகியோா் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள், மாணவா்களுக்கு உற்சாகம் ஊட்டும் பாடல்கள் மூலம், கதைகள் மூலம் கற்பிக்க வேண்டும் எனவும் கூறினாா்கள். முன்னதாக

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமாா் விழிப்புணா்வுப் பாடல்கள் பாடி மாணவா்களை உற்சாகப்படுத்தினாா்.

பின்னா் தன்னாா்வலா்கள் மற்றும் மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தன்னாா்வலா்கள் வளநிஷா, தங்கமணி, குணவதி, தமிழ்செல்வி, சத்துணவு அமைப்பாளா் நாகசெல்வம், உதவியாளா் சசிகலா, மாணவா்கள் பொதுமக்கள் ஆகியோா் கலந்துகொண்டனா். நிறைவாக, ஆசிரியா் கோகிலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT