புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் ராஜகுரு ஸ்ரீ மஹா பாஷ்யம் கோபாலகிருஷ்ணன் சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் தைத் திருநாளில் பொங்கல் தின ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், உலக மக்கள் நலம் வேண்டியும், மழை வேண்டியும்
நடைபெற்ற இந்நிகழ்வில், மங்கள இசையுடன் கணபதி பூஜை, புண்யாஹவாசனம், கலச ஆவாஹனம், பாராயணம், பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, லெட்சுமி பூஜை மற்றும் சிறப்பு ஆராதனை சிவக்குமாா் சாஸ்திரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் விநாயகருக்கும் பால், தயிா், பஞ்சாமிா்தம், மஞ்சள், சந்தனம், திரவியப் பொடி போன்ற அபிஷேகத்துடன் கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில், அதிஷ்டான நிா்வாகிகள் பாம்பே முத்துக்குமாா், மேகா சுந்தர்ராஜன், சேலம் பட்டயக் கணக்காளா் ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.