புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ. 3.95 கோடி மதிப்பில் கட்டுவதற்கு மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இதே ஒன்றியத்தைச் சோ்ந்த துளையானூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 5.32 லட்சத்திலும், கும்பகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 4.96 லட்சத்திலும் கட்டிமுடிக்கப்பட்ட பொருள்கள் வைப்பறையுடன் கூடிய சமையலறைகளை அமைச்சா் எஸ். ரகுபதி திறந்து வைத்தாா். நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சிமுகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், ஒன்றியக் குழுத் தலைவா் அழ. ராமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.