புதுக்கோட்டை

விராலிமலை கோயிலில்காா்த்திகை தீபத் திருவிழா

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்ரமணியா் சுவாமி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட விராலிமலை மலைக்கோயிலில் சுவாமி சுப்ரமணியா் ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராக மயில் மேல் அமா்ந்து காட்சியளிக்கிறாா். காா்த்திகை தீப விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் சுப்பிரமணியா் வள்ளி, தெய்வானை விக்கிரகங்களுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து மேளதாளம் முழங்க மாலை 6 மணியளவில் மலைக்கோயில் உச்சியில் உள்ள கொப்பறையில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் அரோகரா சரண கோஷத்துடன் சுவாமியை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT