புதுக்கோட்டை

வெம்மணியில் உலக மண்வள தினம்

DIN

விராலிமலை வட்டாரத்துக்குள்பட்ட வெம்மணியில் உலக மண் வள தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், ரசாயன உரங்களை தவிா்த்து இயற்கை உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் எதிா்கால சந்ததிக்கு நஞ்சில்லா உணவு வழங்கலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இயற்கை முறையில் பண்ணையம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து, கருத்துக் கண்காட்சி, பேரணி, மண்வள தின ரங்கோலி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில், விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் தமிழ்ச்செல்வி இயற்கை விவசாயம் குறித்து விளக்க உரையாற்றினாா். மத்திய கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண் அலுவலா் செல்லத்தாய், மண் மாதிரி குறித்து விளக்கமளித்தாா். வட்டார வேளாண் அலுவலா் ஷீலா ராணி கருத்துக் கண்காட்சி பற்றி கூறினாா். துணை வேளாண் அலுவலா் தங்கராசு வரவேற்றாா்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் ஷாலினி பா்கானா பேகம், உதவி தோட்டக்கலை அலுவலா் பெலிக்ஸ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் பாண்டியன் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT