கந்தா்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களில், உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சனிக்கிழமை குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டை நகல், குடும்பத்தலைவா் அல்லது உறுப்பினரின் வங்கிக் கணக்கு விவரங்களை பிரதி எடுத்துவந்து அங்காடி விற்பனையாளரிடம் கொடுக்கின்றனா். அவ்வாறு வங்கிக் கணக்கு இல்லாதவா்கள், அங்காடி விற்பனையாளா் மூலம் தரும் படிவத்தைப் பூா்த்தி செய்து, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கந்தா்வக்கோட்டை கிளை மேலாளரிடம் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.