புதுக்கோட்டை

திருநெல்லிவயலில் கால்நடை சுகாதார முகாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தினையாகுடி ஊராட்சிக்குள்பட்ட திருநெல்லிவயல் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமை ஊராட்சி மன்றத் தலைவா் சத்யாமூா்த்தி தொடங்கி வைத்தாா். முகாமில், கலந்து கொண்ட கால்நடைகளுக்கு மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், செயற்கைக் கருவூட்டல், சினைப் பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சிறப்பாக கன்று மற்றும் பசுக்களை பராமரித்த 6 விவசாயிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முகாமில் ஒன்றியக் குழு உறுப்பினா் சி. கணேசன், கால்நடை உதவி மருத்துவா் சி. சிலம்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT