புதுக்கோட்டை

இலுப்பூரில் ஒன்றிய கலைத் திருவிழா

DIN

அன்னவாசல் ஒன்றியம், இலுப்பூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை நடைபெற்ற வட்டார கலைத்திருவிழா போட்டியில் பானைகளில் தத்ரூபமாக ஓவியம் வரைந்து அசத்தினா்.

அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 6,7, 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இலுப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 9,10 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவா்களுக்கு அன்னவாசல் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இதில் நடனம், கிடாா், புல்லாங்குழல் இசைத்தும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். விழாவில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. தொடா்ந்து, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT