புதுக்கோட்டை

கூடுதல் கட்டணம் வசூல்?அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் போராட்டம்

DIN

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினா்.

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறையில் 2021-22-ஆம் கல்வியாண்டு மாணவிகளிடம் பருவக் கட்டணம் என்ற பெயரில் எவ்வித ரசீதும் கொடுக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடா்ந்து புதன்கிழமை கல்லூரி மாணவிகள் இந்திய மாணவா் சங்கத்தினா் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சா. ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் அ. சந்தோஷ்குமாா், துணைத் தலைவா் வசந்தகுமாா், துணைச் செயலா்கள் காா்த்திகா தேவி, பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தைத் தொடா்ந்து கோட்டாட்சியா் கி. கருணாகரன், வட்டாட்சியா் விஜயலெட்சுமி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதனைத் தொடா்ந்து சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT