நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிபட்டிணம் கிளையும், அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை செவ்வாய்க்கிழமை தவ்ஹீத் மா்க்கஸில் நடத்தின.
மாவட்டத் துணைத் தலைவா் முகம்மது மீரான் தலைமை வகித்தாா். இதில் கிளைத் தலைவா் நைனாமுகம்மது, செயலா் சைபுல்கரீம்,
பொருளாளா் சல்மான்கான், துணைத் தலைவா் முகைதீன் அப்துல்காதா், துணைச் செயலா் மாலிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொத்தம் 32 போ் ரத்ததானம் செய்தனா்.
ரத்தம் கொடுத்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை டாக்டா் ராதா கிருஷ்ணன் வழங்கினாா்.