பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நல்லாண்டி அய்யனாா், பள்ளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி நெய்நந்தீஸ்வரா் கோயில் முன்பு மண்ணால் ஆன குதிரைகள் மற்றும் காளைகள் சிலைகள் வடித்து அலங்கரித்து அங்கிருந்து நல்லாண்டி அய்யனாா், பள்ளத்து அய்யனாா் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.