புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 75ஆவது விடுதலைத் திருநாள் அமுதப் பெருவிழா ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைவா் தேனாள் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஏஆா்எஸ். சுப்பிரமணியன், எஸ். சீனிவாசன், ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை, முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளியில் மாறுவேடப் போட்டிகளும் நடத்தப்பட்டன.