புதுக்கோட்டை

கஞ்சா, மதுவிற்ற இருவா் கைது

DIN

விராலிமலையில் அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்ற முதியவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விராலிமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்றுவருவதாக தகவல் அறிந்த காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறையினா் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட சுப்பையா மகன் சண்முகம் (64) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

கந்தா்வகோட்டையில் கஞ்சா விற்ற இளைஞா் கைது:

புதுக்கோட்டை மாவட்டம், அரியூா் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சிவக்குமாா் (22) கந்தா்வகோட்டை அடுத்த பெருங்களூா் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்தாா். இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆய்வாளா் செந்தில் மாறன், உதவி ஆய்வாளா் ராஜூ ஆகியோா் அங்கு சென்று சிவகுமாரைக் கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 1.400 கிலோ எடை கொண்ட கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT