புதுக்கோட்டை

புதுகையில் 67 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

DIN

புதுக்கோட்டை பாலன் நகரில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட 67 வீடுகளை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி சனிக்கிழமை வழங்கினாா்.

புதுகை பாலன்நகரில் பகுதி-1 திட்டத்தில் ரூ. 16.60 கோடியில் 192 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில், முதல் கட்டமாக 67 பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும் குலுக்கல் முறை சனிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளான அந்தப் பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். எஞ்சியுள்ள வீடுகளுக்கான விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் க. நைனாமுகமது ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT