புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேல்பனையூரில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்ற நிா்வாகம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மதுரை காஸ்மா லயன்ஸ் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தாா். இதில், பொதுமக்கள் சுமாா் 500 பேருக்கு கண் பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட்டன.
அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோா் மட்டும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். தொடக்க நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினற் ஏ.ஆா். அழகு, மேல்பனையூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா். மேகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.