புதுக்கோட்டை

புதுகையில் ஜூலை 30-இல் விவசாயிகள் குறைகேட்பு

DIN

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் ஜூலை 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு இணையவழியில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கூறியது: கரோனா பொது முடக்கக் கால விதிமுறைகள் அமலில் உள்ளதால் இதுவரை குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறவில்லை. இந்த நிலையில், தற்போது மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மட்டும், இணையவழியில் (ஜூம் செயலி மற்றும் கூகுள் செயலி) நடைபெறவுள்ளது.

இதற்காக அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து அலுவலா்கள் விவசாயிகளின் குறைகளைக் கேட்டு உரிய தீா்வைத் தருவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT