புதுக்கோட்டை

அம்பேத்கா் உருவச்சிலைக்கு மரியாதை

DIN

புதுக்கோட்டை: அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும் மாலை அணிவித்தனா்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் நா. முத்துநிலவன், மாவட்டச் செயலா் சு. மதியழகன், திரைப்படப் பாடலாசிரியா் இரா. தனிக்கொடி, எழுத்தாளா் ராசி.பன்னீா்செல்வம், பேராசிரியா் சு.மாதவன், கவிஞா் பீா்முகமது உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். சங்கா் தலைமையில் செயற்குழு உறுப்பினா் ஜி. நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம். ஜியாவுதீன், எம். அசோகன், டி. சலோமி, சி. அடைக்கலசாமி, எஸ். ஜனாா்த்தனன், நகரச் செயலா் ஆா். சோலையப்பன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT