கந்தா்வகோட்டை பகுதியில் ஜெட் விமானங்கள் வியாழக்கிழமை வட்டமிட்டதால், அப்பகுதி மக்கள் பரபரப்பு அடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையிலிருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவில் தஞ்சாவூா் விமானப் படைப் பயிற்சித் தளம் அமைந்துள்ளது. இந்த தளத்துக்குச் சொந்தமான 2 ஜெட் விமானங்கள் (போா் பயிற்சி விமானங்கள்) கந்தா்வகோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு தாழ்வாகப் பறந்தது. மேலும் அதிக சப்தத்துடன் இந்த விமானங்கள் பறந்ததால், பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து பாா்த்தனா்.