புதுக்கோட்டை: கரோனா சூழலில் களத்தில் பணியாற்றி வரும் உள்ளாட்சித் துறைப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில், கரோனா பொது முடக்கக் காலத்தில் களப்பணியாற்றி வரும் உள்ளாட்சித் துறை பணியாளா்கள் அனைவரின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். கரோனா தொற்று ஏற்பட்டால் அதற்கான மருத்துவச் செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். நோய்த் தடுப்பு உபகரணங்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாநிலத் துணைத் தலைவா் மீனாள் சேதுராமன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலா் டி.எம். மூா்த்தி சிறப்புரை நிகழ்த்தினாா். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எம். ராதாகிருஷ்ணன், பொருளாளா் ஆா். ஆறுமுகம், புதுக்கோட்டை மாவட்டச் செயலா் வி.எஸ். கனகராஜன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கே.ஆா். தா்மராஜன், மாவட்டச் செயலா் வீ. சிங்கமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.