பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவப்பூரில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலா் சசிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா்கள் மோகன், முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பாஜக மகளிரணிச் செயலா் கவிதா ஸ்ரீகாந்த், ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தாா்.
இந்த முகாமில் 50 போ் ரத்த தானம் செய்தனா்.