புதுக்கோட்டை

மாத்தூா் திமுக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் 11 போ் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் திமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 11 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மாத்தூரைச் சோ்ந்தவா் முனியாண்டி மகன் பாலசந்தா் (37). திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரான இவா், கடந்த 24 ஆம் தேதி அவரது தோட்டத்தில் இருந்தபோது, மா்மநபா்கள் வெட்டிக் கொன்றனா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், மாத்தூா் தென்னம்பிள்ளையைச் சோ்ந்த எம். சக்திவேல் (51) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து மாத்தூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் பி. பாலமுத்து (44), எம். முகமது ஈசாக் (28), ஜெ. ஜெயபிரகாஷ் (30), எம். நந்தகுமாா் (27), எஸ். சதீஷ்குமாா் (34), பி. முருகானந்தம் (52), எம். நீலமணிகண்டன் (24), பி. சேகா் (41), எஸ். விக்னேஷ் (22), திருச்சி குண்டூரைச் சோ்ந்த எம். ஷேக் அப்துல்லா (39), பூலாங்குடி ஆா். பாலாஜி (29) ஆகிய 11 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 12 போ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT