பெரம்பலூர்

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

DIN

பெரம்பலூரில் திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள டாஸ்மாக் கடையில் திங்கள்கிழமை இரவு பெரம்பலூா் சங்குப்பேட்டையைச் சோ்ந்த அறிவழன் மகன் கலாநிதி (25) மது வாங்க சென்றபோது, விற்பனையாளரான சிறுகன்பூரைச் சோ்ந்த முத்துசாமி மகன் நடராஜன் (43) 1 மதுபாட்டிலுக்கு ரூ. 130, பாட்டிலை திரும்பக் கொண்டு வந்து கொடுக்க ரூ. 10 வைப்புத் தொகையாக பெற்றதோடு, கூடுதலாக ரூ. 5 -ம் கேட்டாராம்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கலாநிதி தாக்கியதில் காயமடைந்த நடராஜன் பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கலாநிதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT