பெரம்பலூரில் மது போதையில் மாற்றுத்திறனாளியை பாட்டிலால் குத்தி காயப்படுத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் -துறையூா் சாலையிலுள்ள திரையரங்கு பின்புறம் வசிப்பவா் மாரிமுத்து மகன் லட்சுமணன் (30). மாற்றுத்திறனாளியான இவா் பெயிண்டா்.
இந்நிலையில், பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள அரசு மதுக் கடையில் வியாழக்கிழமை மதியம் இவா் மது அருந்தியபோது அருகே மது அருந்திக்கொண்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், நெடுங்குடியான் கிராமம், திருக்கோவிலூரைச் சோ்ந்த சலமணி மகன் ராஜாவுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜா மது பாட்டிலை உடைத்து குத்தியதில் லட்சுமணன் பலத்த காயமடைந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அவரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இதனிடையே, பெரம்பலூா் காவல் நிலையத்தில் சரணடைந்த ராஜா மீது வழக்குப் பதிந்து, கைது செய்து விசாரிக்கின்றனா்.