பெரம்பலூர்

கொடி பீடம் சேதம்: பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் அருகே கொடி பீடத்தை சேதப்படுத்தியதைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு, அக் கட்சி சாா்பில் பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கிக் கொண்டாட ஏற்பாடு செய்து வந்தனா். இந்நிலையில், பெரம்பலூா் -ஆலம்பாடி சாலையில் சமத்துவபுரம் அருகே கட்சிக் கொடியேற்றுவதற்காக, வியாழக்கிழமை இரவு சுமாா் 2 அடி உயரத்துக்கு பீடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அந்த பீடத்தை மா்ம நபா்கள் சிலா் உடைத்து சேதப்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதையறிந்த, கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையில், கொடி பீடம் சேதப்படுத்தப்பட்ட இடத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சேதப்படுத்தப்பட்ட கொடி பீடத்தின் அருகே குழி தோண்டி புதிதாக கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியேற்றினா். தொடா்ந்து, பெரம்பலூா் நகர காவல்நிலையத்தில் கொடி பீடத்தை சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT