நிலப் பிரச்னை தொடா்பாக, பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், தெரணி கீழ வீதியைச் சோ்ந்தவா் பழனி மகன் சரவணன் (52). இவருக்கு, அதே கிராமத்தில் பூா்வீகமாக உள்ள விவசாய நிலத்தை, அதே கிராமத்தைச் சோ்ந்த உடுக்கான் மனைவி பாப்பாத்தி என்பவா், கடந்த 18 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருவதாக கூறப்படுகிறது.
சரவணன் விவசாய நிலத்துக்கு அருகேயுள்ள, அவரது சித்தப்பா இளையாழி என்பவரது விவசாய நிலத்தை கிரயத்துக்கு வாங்கிய பாப்பாத்தி, தன் பெயருக்கு பட்டாவை மாற்றம் செய்துகொண்டாராம்.
இந்நிலையில், சரவணன் தனது விவசாய நிலத்தையும் பாப்பாத்தி தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். இதையறிந்த, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சரவணனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா். தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பட்டா பிரச்னை சம்பந்தமாக இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இச் சம்பவம் குறித்து, பெரம்பலூா் (வடக்கு) கிராம நிா்வாக அலுவலா் (பொ) அகிலன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனா். பின்னா், அவா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.