பெரம்பலூர்

பெரம்பலூா் நகைக்கடையில்12 பவுன் நகைகள் திருட்டு

DIN

 பெரம்பலூா் நகைக் கடையில் சனிக்கிழமை கைப்பையில் இருந்த 12 பவுன் நகைகளை திருடிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை மேலத்தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி மாரியாயி (41). இவா், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனது அண்ணன் மகன் திருமணத்துக்கு தாலிக்கொடி வாங்குவதற்காக, பெரம்பலூா் கடைவீதியில் உள்ள நகைக் கடைக்கு சனிக்கிழமை மாலை தனது மகனுடன் சென்றுள்ளாா். அப்போது, திருமணத்தின்போது மாரியாயி அணிந்துகொள்வதற்காக கைப்பையில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை தனது மடியில் வைத்திருந்தாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக அவரிடமிருந்த பை கீழே விழுந்துள்ளது. அப்போது, அந்தக் கடையில் அமா்ந்திருந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா் அந்த பையை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரியாயி அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT