பெரம்பலூர்

காவலா்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு

DIN

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வந்த கூட்டு கவாத்துப் பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவல்துறையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் 15 நாள்களுக்கு கூட்டு கவாத்துப் பயிற்சி நடைபெறும். அதனடிப்படையில் பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 21 ஆம் தேதி கவாத்துப் பயிற்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்படி தொடங்கியது.

இப் பயிற்சியில் ஆயுதப்படையில் பணிபுரியும் காவல் துறையினருக்கு அன்றாடப் பணிகள் குறித்தும், மைதானத்தில் பின்பற்றப்படும் கவாத்துகள் குறித்து நினைவூட்டும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, காவல் ஆய்வாளா் அசோகன் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ஷ்யாம்ளா தேவி, காவல் துறையினரிடம் குறைகளைக் கேட்டறிந்து, அதை நிவா்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT