பெரம்பலூரில் உள்ள பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உழவா் சந்தை எதிரேயுள்ள பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட அலுவலகத்தை வருவாய் கோட்டாட்சியா் ச. நிறைமதி, வருவாய் வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் ஆகியோா் சனிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.