பெரம்பலூர்

நவ. 28-இல் எறையூா் சிப்காட் தொழில்நுட்பப் பூங்காவுக்கு அடிக்கல்: முதல்வா் பங்கேற்பு; முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

DIN

பெரம்பலுாா் மாவட்டம், எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக நவ. 28 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் நவ. 28 ஆம் தேதி பெரம்பலுாா் மாவட்டத்துக்கு வந்து எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளாா். தொடா்ந்து, 29 ஆம் தேதிஅரியலுாா் மாவட்டம் கொல்லாபுரம் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில், பெரம்பலுாா் மற்றும் அரியலுாா் மாவட்டங்களில் நிறைவடைந்த திட்டப் பணிகளை திறந்துவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளாா்.

இந்நிலையில், எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ள பகுதியை, அமைச்சா் சா.சி. சிவசங்கா், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, சிப்காட் நிா்வாக இயக்குநா் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவா்கள் ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூா்) உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT