பெரம்பலூா் அருகே டிராக்டா் பேட்டரியை திருட முயன்ற நபரை மருவத்தூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் ராஜா. இவரது டிராக்டரிலிருந்த பேட்டரியை, சிறுகுடல் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மணி (38), அண்மையில் திருட முயன்றாா். இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கூச்சலிட்டதால் மணி தலைமறைவாகிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவந்தனா். இந்நிலையில், மணியை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.