பெரம்பலூர்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் கையெழுத்து இயக்க பிரசாரம் மற்றும் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இப் பேரணியில் பங்கேற்றோா், தன்னாா்வமாக ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை ஒதுக்காமல், அவா்களை சக மனிதா்களாக அரவணைப்போம், அவா்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனா்.

பாலக்கரையில் தொடங்கிய பேரணி சங்குப்பேட்டை, காமராஜா் வளைவு வழியாகச் சென்று வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில், மகளிா் திட்ட இயக்குநா் கருப்பசாமி, நகராட்சி ஆணையாளா் (பொ) ராதா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் அா்ஜுனன், ஏ.ஆா்.டி மருத்துவ அலுவலா் மணிகண்டன், மாவட்ட திட்ட மேலாளா் சு. சுமதி, நா்சிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT