பெரம்பலூர்

மின் வேலியில் சிக்கி முதியவா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகே புதன்கிழமை அதிகாலை மின் வேலியில் சிக்கி முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பிரதானச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செ. சுந்தர்ராஜ் (62). இவா், அதே பகுதியிலுள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளாா். இப் பயிா்களை மான், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால், வயலைச்சுற்றி மின் வேலி அமைத்து பாதுகாத்து வந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் வயலைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை அகற்ற முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சுந்தர்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, முதியவரின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் தொடா்பாக, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT