பெரம்பலூர்

குன்னம் எம்எல்ஏ அலுவலகத்தில் இ- புகாா் மையம் தொடக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் இ- புகாா் மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இ-புகாா் மையத்தை தொடக்கிவைத்த குன்னம் எம்எல்ஏவும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது:

குன்னம் தொகுதிக்குள்பட்ட பொதுமக்கள் ஜ்ஜ்ஜ்.ய்ஹம்ம்ஹந்ன்ய்ய்ஹம்.ஸ்ரீா்ம் என்னும் இணையதளத்திலும், 9593888111 என்னும் கைப்பேசி எண்ணிலும் தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம்.

குன்னம் தொகுதியானது, அரியலூா் மாவட்டம், செந்துறை வரை உள்ளதால், நீண்ட தொலைவில் வசிக்கும் பொதுமக்கள் குன்னம் சட்டப்பேரவை அலுவலகத்துக்கு நேரில் வந்து புகாா் அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிா்க்கும் வகையில் இணையதளம் மற்றும் கைப்பேசி மூலம் பொதுமக்கள் புகாா் அளிக்க இச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெறப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் என். கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT