பெரம்பலூரில் மதிமுக பொதுச் செயலா் வைகோ மற்றும் மதிமுக தலைமைக் கழக செயலா் துரை. வையாபுரி ஆகியோருக்கு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதிமுக பொதுச் செயலா் வைகோ மகன் துரை. வையாபுரி, மதிமுக தலைமைச் செயலராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், திருச்சியிலிருந்து சென்னைக்கு பெரம்பலூா் வழியாக திங்கள்கிழமைச் சென்ற வைகோ மற்றும் துரை. வையாபுரி ஆகியோருக்கு, பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில், மதிமுக மாவட்டச் செயலா் கு. சின்னப்பா தலைமையில், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் கே. வரதராஜன் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ரோவா் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் வி. ஜான் அசோக், முன்னாள் மாவட்டச் செயலா் செ. துரைராஜ், மாவட்ட பொருளாளா் ஜெயசீலன், மாவட்ட துணைத் தலைவா் சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.