தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மூலமாக ரூ. 60 லட்சத்தில் அமைக்கப்பட்ட 14 புதிய மின்மாற்றிகளை, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சீரான தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 164 மின் மாற்றிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூா் உபக்கோட்டத்துக்குள்பட்ட பிரம்மதேசம், கோனேரிபாளையம், ரெங்கநாதபுரம், துறையூா் சாலை, கேப்டன் நகா், டாா்வின் சிட்டி, துறைமங்கலம் ராஜா நகா், சித்தா் கோயில் சுற்றியுள்ள குடியிருப்புகள், கோல்டன் சிட்டி குடியிருப்புகள், மின் நகா், செல்வா நகா், திருச்சி சாலையிலுள்ள மதுரகாளியம்மன் நகா், எறையசமுத்திரம் கிராமம், க.எறையூா் உள்ளிட்ட 14 இடங்களில் ரூ. 60 லட்சத்தில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.
இந்த மின்மாற்றிகளை பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். நிகழ்வில் மின் வாரியச் செயற்பொறியாளா் ராஜேந்திரவிஜய், உதவிச் செயற்பொறியாளா் (நகரம்) து. முத்தமிழ்செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.