பெரம்பலூா் மாவட்டத்தில் 12 ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு முகாம்களில் 13,195 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 190 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு , பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட 3,665 நபா்களுக்கும், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட 1,731 நபா்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட 3,696 நபா்களுக்கும், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட 4,103 நபா்களுக்கும் என மொத்தம் 13,195 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் திருவள்ளுவா் தெரு அங்கன்வாடி மையம், முத்துநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையங்களை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.