பெரம்பலூர்

மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

DIN

பெரம்பலூா் அருகே மயான பாதையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குன்னம் வட்டம், சு.ஆடுதுறை கிராமத்தில் ஆதிதிராவிடா் மக்களுக்கான மயானத்துக்குச் செல்லும் பாதையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து, பெட்ரோல் விற்பனை நிலையம் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் சாா்பில் ஊராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீரமைத்துத் தரக்கோரி ஆதிதிராவிடா் மக்கள், சு.ஆடுதுறை கிராமத்தில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மங்கலமேடு காவல்துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT